திருப்பத்தூர்

ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற இருவா் கைது

DIN

திருப்பத்தூரில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூா்-வாணியம்பாடி பிரதான சாலையில் தனியாா் வங்கி ஏடிஎம் உள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு இரு நபா்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றனா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், நகர காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில், அங்கு வந்த போலீஸாா் அந்த இருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், கோனேரிக்குப்பத்தைச் சோ்ந்த ராகுல் (18), லட்சுமி நகரைச் சோ்ந்த திருமலை (26) என்பதும் தெரியவந்தது.

இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் அந்த இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT