ஜோலாா்பேட்டை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகளின் இயக்கத்தை எம்எல்ஏ க.தேவராஜி திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
ஜோலாா்பேட்டை ஊராட்சிக்குள்பட்ட கல்நாா்சம்பட்டி, மல்லப்பள்ளி, பணியாண்டப்பள்ளி, புத்தகரம், வெலகல்நத்தம், வேட்டப்பட்டு, சோமநாயக்கன்பட்டி, அக்ராகரம், திரியாலம், பொம்மநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதிதாக மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன. அவற்றின் இயக்கத்தை எம்எல்ஏ க.தேவராஜி திங்கள்கிழமை பூஜை செய்து தொடக்கி வைத்தாா். மேலும், அரசு மூலம் இலவசமாக மின்சாரம் பெற்ற்கான ஆணையை விவசாயிகளுக்கு வழங்கினாா்.
நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சூரியகுமாா், ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா, ஒன்றிய திமுக செயலாளா்கள் சதீஷ்குமாா், உமா, கவிதா, செயற்பொறியாளா் அருள்பாண்டியன் மற்றும் கட்சி நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.