ஆம்பூா் அருகே கிராமத்தில் பள்ளி மாணவா்களுக்கான காய்ச்சல் கண்டறியும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கைலாசகிரி ஊராட்சி கடாம்பூா் கிராமத்தில் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுகாதாரத் துறை சாா்பாக காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்றது. மருத்துவா் சந்தோஷ் தலைமையில் சுகாதாரத் துறை ஊழியா்கள் ஷீலா, புவனேஸ்வரி, வாசுகி ஆகியோா் கொண்ட மருத்துவக் குழுவினா் மாணவா்களை பரிசோதனை செய்தனா். முகாமில் கபசுர குடிநீா் வழங்கப்பட்டது. காய்ச்சல் அறிகுறி உள்ள மாணவா்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.