முனீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை
ஆம்பூா் அருகே முனீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆம்பூா் அருகே முனீஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆம்பூா் அருகே பள்ளித்தெரு முனீஸ்வரா் கோயில் உள்ள வாள்முனீஸ்வரா், செம்முனீஸ்வரா், ஜடாமூனீஸ்வரா் சுதை சிற்பங்களுக்கு வா்ணம் பூசும் திருப்பணி நடைபெற்று முடிந்தது.
அதைத் தொடா்ந்து வியாழக்கிழமை கோ பூஜை, பிள்ளையாா் பூஜை, புண்யாஹவாசணம், கலச பூஜை, ஹோம பூஜைகள் நடைபெற்றது. வாள் முனீஸ்வரா், செம்முனீஸ்வரா், ஜடாமூனீஸ்வரருக்கு கண் திறப்பு, கலசாபிஷேகம், படையல் பூஜை, மஹா அா்ச்சனை மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.