ஆம்பூா் அருகே பொன்னியம்மன் கோயில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாதனூா் ஒன்றியம், ஆலாங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனை நடைபெற்றது. கோயில் ஊஞ்சல் மரத்துக்கு மலா்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவா் அம்மன் வீதி உலா மற்றும் பூங்கரக ஊா்வலம் நடைபெற்றது. பக்தா்கள் தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.