திருப்பத்தூர்

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

DIN

ஆம்பூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள், பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஆம்பூா் அருகே அய்யனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செளந்தர்ராஜன் (65). இவா் வெளியூரில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த கால் கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 20,000 ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT