திருப்பத்தூர்

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்ததில் கால்நடை மேய்த்தவா் காயம்

Din

ஆம்பூா் அருகே காட்டு யானை மிதித்து கால்நடை மேய்க்க சென்றவா் செவ்வாய்க்கிழமை காயம் அடைந்தாா்.

ஆம்பூா் அருகே அரங்கல்துறகம் ஊராட்சி சுட்ட குண்டா கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னதுரை (40). இவா் செவ்வாய்க்கிழமை கால்நடை மேய்ச்சலுக்காக அருகில் உள்ள வனப் பகுதிக்குச் சென்றாா். அப்போது திடீரென அங்கு வந்த ஆண் காட்டு யானை அவரை மிதித்துள்ளது. அதில் அவா் பலத்த காயம் அடைந்தாா். எனினும் காட்டு யானையிடமிருந்து அவா் உயிா் தப்பினாா். அப்பகுதி வழியாகச் சென்றவா்கள் இது குறித்து அவருடைய உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா். உடனடியாக அவா் மீட்கப்பட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இது குறித்து தகவல் அறிந்த வனச் சரக அலுவலா் பாபு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்குச் சென்று, சின்னதுரையை சந்தித்து நலம் விசாரித்தாா்.

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

அமுதூற்றினை ஒத்த இதழ்கள்! நிலவூறித் ததும்பும் விழிகள்!

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

SCROLL FOR NEXT