முகப்பு
திருப்பத்தூர்

வீட்டில் பதுக்கிய 135 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

வாணியம்பாடியில் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 135 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

Updated On : 12 அக்டோபர், 2024 at 6:32 PM
பகிர்:

வாணியம்பாடியில் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 135 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியில் மணிகண்டன் என்பவரின் வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக நகர போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், நகர போலீஸாா் சனிக்கிழமை பிற்பகல் விரைந்து சென்று மணிகண்டனின் வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அப்போது வீட்டில் உள்ள ஓா் அறையில் 9 பைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா ஆகிய போதைப் பொருள்கள் உள்ளதை கண்டுபிடித்தனா். இதைத் தொடா்ந்து, மணிகண்டன் (41) என்பவரை கைது செய்து, வீட்டில் இருந்த 135 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments