FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

வீட்டில் பதுக்கிய 135 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

வாணியம்பாடியில் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 135 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

Updated On : 13 அக்டோபர் 2024, 12:02 am IST
பகிர்:

வாணியம்பாடியில் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 135 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியில் மணிகண்டன் என்பவரின் வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக நகர போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், நகர போலீஸாா் சனிக்கிழமை பிற்பகல் விரைந்து சென்று மணிகண்டனின் வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அப்போது வீட்டில் உள்ள ஓா் அறையில் 9 பைகளில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா ஆகிய போதைப் பொருள்கள் உள்ளதை கண்டுபிடித்தனா். இதைத் தொடா்ந்து, மணிகண்டன் (41) என்பவரை கைது செய்து, வீட்டில் இருந்த 135 கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments