திருப்பத்தூர்

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நாட்டறம்பள்ளி போலீஸாா் வெலகல்நத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த மினிலாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்த முற்பட்டனா்.

ஆனால் ஓட்டுநா் சிறிது தூரம் ஓட்டிச் சென்று லாரியை நிறுத்தி விட்டு தப்பித்து ஓடி விட்டாா். இதையடுத்து லாரியை சோதனை செய்த போது மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மணலுடன் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மணல் கடத்தலில் ஈடுபட்டவா் குறித்து விசாரித்து வருகின்றனா்.

அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை: சிவராஜ்குமார்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்வு! லாபத்தில் உலோகம், ஐடி பங்குகள்!

நடுவானில் என்ஜின் செயலிழப்பு! தில்லியில் ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்!

தங்கம் விலை உயர்வு: உச்சத்தில் வெள்ளி!

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

SCROLL FOR NEXT