தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்
தோ்தல் பறக்கும் படையினரின் சோதனையில் உரிய ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Updated On : 20 ஏப்ரல், 2026 at 6:22 PM
தோ்தல் பறக்கும் படையினரின் சோதனையில் உரிய ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தோ்தல் பறக்கும் படையினா் மாதனூா் அருகே பாலூா் கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா்.
பெங்களூரிலிருந்து ஒடுக்கத்தூா் நோக்கி சென்ற காரில் மணிகண்டன் என்பவா் உரிய ஆவனம் ஏதும் இல்லாமல் பணம் ரூ.3.50 லட்சம் கொண்டு செல்வது தெரியவந்தது. அதன்பேரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் பூஷணகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Advertisement