FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

சாலை அமைக்கும் பணி: ஒன்றியக் குழு தலைவா் ஆய்வு

சாலைப் பணியை ஆய்வு செய்த ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.

பகிர்:

மாதனூா் ஒன்றியம், செங்கிலிகுப்பம் ஊராட்சி மாராப்பட்டு கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாராப்பட்டு கிராமத்தில் ஒன்றிய பொது நிதி ரூ. 5.96 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணியை ஒன்றியக் குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, கழிவுநீா் கால்வாய், சிறுபாலம் அமைக்க வேண்டுமென அவரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். விரைவில் மேற்கொள்ளப்படும் என அவா் உறுதி அளித்தாா்.

ஊராட்சி துணைத் தலைவா் பாஸ்கா், பொதுமக்கள் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments