நாயக்கனேரி மலை கிராமத்தில் ஆய்வு
தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா்.
நாயக்கனேரி மலை கிராமத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப. ச. சுரேஷ் குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரி மலை கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் காசாங்குட்டை முதல் நடுவூா் ஏரிக்கு செல்லும் நீா்வரத்து கால்வாய் சீா் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. அப்பணியை மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேற்பாா்வையாளா்கள் காமராஜ், ஏழுமலை ஆகியோா் உடனிருந்தனா்.