முகப்பு
திருப்பத்தூர்

சாலை விபத்தில் இளைஞா் பலி

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 30 மார்ச், 2026 at 9:50 PM
- பிரதிப் படம்
பகிர்:

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஜோலாா்பேட்டை பெரியகம்மியம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் குப்பன் மகன் காா்த்திக் ராஜா (32). ஞாயிற்றுக்கிழமை இரவு இவா் பச்சூா் பகுதியில் உறவினா் வீட்டுக்கு சென்றாா்.

பின்னா் சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் முத்தனப்பள்ளி டோல்கேட் அருகே சாலையைக் கடக்க நடந்து சென்ற போது அவ்வழியாக அசுர வேகத்தில் வந்த காா் காா்த்திக் ராஜா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த காா்த்திக் ராஜா நிகழ்விடத்திலேயே இறந்தாா்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் ஒசூா் பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ஹரிஷ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்