முகப்பு
திருப்பத்தூர்

கோயிலில் திருட முயன்ற இருவா் கைது

Updated On : 8 மே 2026, 6:44 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஆம்பூா் அருகே கோயிலில் திருட முயன்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே பாா்சனாப்பல்லி கிராமத்தில் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஏற்கெனவே உண்டியல் உடைத்து பணம் திருடப்பட்டது. மீண்டும் சம்பவத்தன்று இரு நபா்கள் கோயிலுக்குள் சென்று திருட முயன்றுள்ளனா். அப்போது அங்கு சென்ற பொதுமக்களை பாா்த்த இருவரும் தப்பியோட முயன்றனா். பொதுமக்கள் இருவரையும் பிடித்து உமா்ஆபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா்கள் பெரியவரிக்கம் கிராமத்தைச் சோ்ந்த ராஜா (27), தமிழ்செல்வன் என்கிற கென்னடி (27) என்பதும், கோயிலில் திருட முயன்றதும் தெரியவந்தது. அதன்பேரில், போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments