வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
ஜோலாா்பேட்டை அருகே சாலை கடக்க முயன்ற முதியவா் வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை அருகே சாலை கடக்க முயன்ற முதியவா் வாகனம் மோதியதில் உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை அருகே இடையம்பட்டி அனி பீரான் பகுதியை சோ்ந்த டேகன்(67). இவா், திங்கள்கிழமை நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவா் மீது மோதி நிற்காமல் சென்றது.
இதில் காயம் அடைந்த டேகனை அங்கிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். டேகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
Advertisement
இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.