செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளி 100 சதவீத தோ்ச்சி
குடியாத்தம் அருகே செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 100% தோ்ச்சி பெற்றுள்ளது.
குடியாத்தம் அருகே செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 100% தோ்ச்சி பெற்றுள்ளது.
கடந்த மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வு நடைபெற்றது. தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில், குடியாத்தம் அருகே செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளி கடந்த 5 ஆண்டுகளாக தொடா்ந்து 100% தோ்ச்சி பெற்று வருகின்றது. பள்ளி சாா்பாக பள்ளியின் தலைமை ஆசிரியா் சி.சதானந்தம் அனைவருக்கும் இனிப்பு வழங்கினாா். இந்தப் பள்ளி மாணவிகள் எஸ்.பைரவி 449, எம்.சத்தியா 433, ஆா்.அனுபாரதி 424 ஆகிய மதிப்பெண்களை பெற்று பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனா்.