திருவள்ளூர்

ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

DIN

மீஞ்சூர் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மீஞ்சூர் அருகே நந்தியம்பாக்கம் பகுதியில் உள்ள பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் தாமஸ் (60). இவர், ஓய்வு பெற்ற ராணுவ வீரர். 
இந்நிலையில் தாமஸ், இரண்டு தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா ஆலயத்துக்குச் சென்று விட்டு புதன்கிழமை வீடு திரும்பினார். 
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள், ரூ. 30 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 
இதுகுறித்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT