முகப்பு
திருவள்ளூர்

21,903 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் 21,903 பேருக்கு மடிக்கணினிகள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் 21,903 பேருக்கு மடிக்கணினிகள் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள், புத்தகப் பை உள்ளிட்ட பல்வேறு நலத்தி ட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், பிளஸ் 2 மாணவ, மாணவிகளின் கல்வி அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
திருவள்ளூர் மாவட்டத்தில் 111 அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவ, மாணவிகள் 21,903 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, எல்காட் நிறுவனம் மூலம் கடந்த 2 நாள்களாக ஒவ்வொரு பள்ளிக்கும் மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதில், முதல்கட்டமாக 51 மேல்நிலைப் பள்ளிகளுக்கு 11,546 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. வரும் நாள்களில் மீதமுள்ள பள்ளிகளுக்கு 10,357 மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன. 
இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட நாளில் விழா நடத்தப்பட்டு, ஆட்சியர் , கல்வித் துறை அதிகாரிகள் முன்னிலையில் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →