திருவள்ளூர்

100 நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்

DIN

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கக் கோரியும், நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தியும்  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 
பொன்னேரி வட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள  தடப்பெரும்பாக்கம், சிறுவாக்கம், வன்னிப்பாக்கம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட  கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கக் கோரியும், ஏற்கெனவே இத்திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படாததால் நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தியும் நடைபெற்ற  முற்றுகைப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து,  போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். 
இதனை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT