திருவள்ளூர்

மாதவரம் அருகே மெக்கானிக் கொலை

DIN


மாதவரம் அருகே மெக்கானிக் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். 
செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்குள்பட்ட சோலையம்மன் நகர் 3-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த கணேசன் மனைவி ராணி அம்மாள். கணேசன் இறந்து விட்ட நிலையில் அதே பகுதியில் ராணி அம்மாள் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர்களுக்கு நாகலட்சுமி (26), தீபா (24) என்ற இரண்டு மகள்களும், கார்த்திக் (23) என்ற மகனும் உள்ளனர். இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில், மகன் கார்த்திக் கொளத்தூர் ஆர்டிஓ அலுவலகம் அருகே உள்ள ஒரு வாகன பழுதுபார்க்கும் கடையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார்.   இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் கார்த்திக் பகல் சுமார் 12 மணியளவில், பணிபுரிந்து கொண்டிருந்தபோது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கடைக்குள் புகுந்தது. 
அவர்களைக் கண்டவுடன் கார்த்திக் ஓட முயன்றார். ஆனால், அவரை வழிமறித்த அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கார்த்திக்கை சரமாரிமாக வெட்டினர். இத்தாக்குதலில் நிலைகுலைந்த கார்த்திக் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இறந்ததை உறுதி செய்து கொண்ட அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.  
இது குறித்து மாதவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்தில் மாதவரம் காவல் துணை ஆணையர் ரவளிபிரியகந்தபுனேனி, உதவி ஆணையர் ராமலிங்கம், காவல் ஆய்வாளர் கோபிநாத் ஆகியோர் விசாரணை நடத்தினர். கார்த்திக்கின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  கார்த்திக் என்ன காரணத்திற்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT