திருவள்ளூர்

மாதவரத்தில் கண்காணிப்பு கேமராக்கள்: காவல் ஆணையர் இயக்கி வைப்பு

DIN


மாதவரம் எல்லைக்குள்பட்ட பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை சென்னை மாநகர காவல் துறை ஆணையர் செவ்வாய்க்கிழமை இயக்கி வைத்தார்.
சென்னையில் குற்றங்களைத் தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து, மாதவரம் காவல் மாவட்டத்துக்குள்பட்ட மாதவரம், புழல், செங்குன்றம் பகுதிகளில் மாதவரம்-செங்குன்றம் நெடுஞ்சாலை செங்குன்றம்-செம்பியம் சாலை, செங்குன்றம்-அம்பத்தூர் சாலை, மணலி 200 அடி சாலை மற்றும் பொன்னேரி சாலை ஆகிய பகுதிகளில் மாதவரம் போக்குவரத்துக் காவல் துறை சார்பிலும், மாதவரம் மாவட்ட சட்டம் ஒழுங்கு காவல் துறை சார்பிலும் 686 கேமராக்கள் பொருத்தப்பட்டன. 
இவற்றை சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே.விசுவநாதன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர், போக்குவரத்துக் காவலருக்கு ஆடைகள், சுவாசக் கவசம் உள்ளிட்டவற்றை வழங்கினார். 
சென்னை கூடுதல் காவல் ஆணையர் தினகரன், சென்னை வடக்கு இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, துணை ஆணையர்கள் ரவளிபிரியா, கலைச்செல்வன், பகலவன், உதவி ஆணையர்கள் ராமலிங்கம், ரவி, உக்கிரபாண்டியன், வெங்கடேசன், பிரபாகரன் மற்றும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT