திருவள்ளூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவர் மீது வழக்குப் பதிவு

DIN


ஆரம்பாக்கம் அருகே சிறுமியை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியவரை கும்மிடிப்பூண்டி மகளிர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். 
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த சங்கர்(33) கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கினார். 
இது தொடர்பாக அச்சிறுமியின் பெற்றோர் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர்கள் சங்கரைத் தாக்கியதோடு, ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை கும்மிடிப்பூண்டி மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
அதையடுத்து, சங்கர் மீது வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீஸார், பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த அவரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துமனையில் சேர்த்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

SCROLL FOR NEXT