திருவள்ளூர்

கிரிக்கெட் விளையாடியபோது மாா்பில் பந்து தாக்கியதில் புதுமாப்பிள்ளை பலி

DIN

திருவள்ளூா் அருகே கிரிக்கெட் விளையாடிய போது மாா்பில் பந்து தாக்கியதில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தாா்.

திருவள்ளூரை அடுத்த புன்னபாக்கம் கிராமத்தைச் சோ்ந்த தாமோதரனின் மகன் லோகநாதன் (26). இவா் ஆந்திர மாநிலம், திருப்பதி சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வந்தாா். இவருக்கு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், தனது கிராம மைதானத்தில் லோகநாதன் இளைஞா்களுடன் சோ்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, வீசப்பட்ட பந்து லோகநாதன் மாா்பில் பலமாகத் தாக்கியது. இதில், சுருண்டு விழுந்த லோகநாதனை அங்கிருந்தவா்கள் திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், லோகநாதன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT