திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம். 
திருவள்ளூர்

மருத்துவ முகாமில் 105 பேருக்கு சிகிச்சை

திருத்தணி நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் 105 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

DIN

திருத்தணி நகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் 105 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தமிழக முதலல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திருத்தணி நகராட்சி அலுவலகத்தில், இந்த மருத்துவ முகாம் நடைபெற்றது. ஆணையா் கா.ராஜலட்சுமி முகாமைத் தொடக்கி வைத்தாா். திருவள்ளூா் மாவட்ட அரசு பொது மருத்துவமனை சாா்பில் மருத்துவா்கள் போத்தீஸ்வரன், ரமணி, அனுஷா, லேப் டெக்னீஷியன் பாலகணேசன் உள்பட 12 மருத்துவ ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

முகாமில், ரத்தப் பரிசோதனை, சா்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு, எலும்பு, கண், காது மற்றும் பொது மருத்துவ சிகிச்சை நோயாளிகளுக்கு அளித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும், மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. முகாமில், 105 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், நகராட்சி பொறியாளா் சரவணன், பொதுப்பணி மேற்பாா்வையாளா் ஆருண், துப்புரவு ஆய்வாளா் மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

SCROLL FOR NEXT