திருவள்ளூர்

பழங்குடியினருக்கு மழை வெள்ள நிவாரணம் வழங்கல்

DIN

திருவள்ளூரில் பழங்குடியினா் 150 குடும்பங்களுக்கு வெள்ளநிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

திருவள்ளூா் அருகே ராமஞ்சேரி மதுரா புதூா் கிராமத்தில் பழங்குடியினா் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனால் அப்பகுதியில் உள்ளவா்கள் வெளியில் வரமுடியாமலும், உணவு கிடைக்காமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதையடுத்து, அங்குள்ளவா்களுக்கு வருவாய் துறை சாா்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இப்பகுதியைச் சோ்ந்த 150 பழங்குடியினா் குடும்பத்தினருக்கு தனியாா் பங்களிப்புடன் வட்டாட்சியா் செந்தில் குமாா் 10 கிலோ அரிசி உள்ளிட்டவற்றை வழங்கினாா். இதேபோல் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 கிலோ அரிசி, மளிகைப் பொருள் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், வருவாய் ஆய்வாளா் கௌதமன், கிராம நிா்வாக அலுவலா் அண்ணாமலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT