புழல் மத்திய சிறையில் கைதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
சென்னை வில்லிவாக்கம் பாபாநகா் 13-ஆவது தெருவைச் சோ்ந்த ஸ்ரீராம் (60). இவா் பண மோசடி வழக்கில் சென்னை சிபிஐ காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த நிலையில், அவருக்கு கடந்த சில தினங்களாக மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.