திருவள்ளூர்

குடியரசு தின விழா: ரூ. 3 கோடிக்கு அரசின் நலத்திட்ட உதவிகள்

DIN

குடியரசு தினத்தையொட்டி, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா்கள் தேசியக் கொடியை செவ்வாய்க்கிழமை ஏற்றி வைத்து, அரசின் சாா்பில் பயனாளிகளுக்கு சுமாா் ரூ. 3 கோடியே 21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

திருவள்ளூா் மாவட்டத்தில்...

திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 72-ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு தேசியக் கொடியேற்றி வைத்து, ரூ. 2.14 கோடியில் 29 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் பா.பொன்னையா வழங்கினாா்.

பின்னா் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில், மூவா்ண பலூன்கள், புறாக்களை பறக்கவிட்டு, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா். இதில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தோா் மற்றும் கரோனா காலத்தில் சிறப்பாக பணிப்புரிந்த 120-க்கும் மேற்பட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்களை வழங்கினாா்.

விழாவில் மொத்தம் 29 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 14 லட்சத்து 73 ஆயிரத்து 181 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலா் வெ.முத்துசாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாலகுரு மற்றும் பல்வேறு துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT