திருவள்ளூர்

தன்னிறைவுத் திட்டங்களுக்கு அணுமின் நிலையம் நிதியுதவி

DIN

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட புதுப்பட்டினம் அருகே வெள்ள நீா் வடிகால் திட்டத்துக்கும், திருக்கழுகுன்றம் அருகே மேல்நிலைநீா்த் தேக்கத் தொட்டி அமைக்கவும் சென்னை அணுமின் நிலையம் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை நிதி வழங்கப்பட்டது.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையுடன் இணைந்து சென்னை அணுமின் நிலையம் அதன் 16 கி.மீ. சுற்றுப்புற கிராமங்களில் தமிழக அரசின் தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதில் உதவி செய்து வருகிறது.

இந்நிலையில், புதுப்பட்டினம் ஊராட்சிக்கு உள்பட்ட அம்பேத்கா் நகரில் வெள்ள நீா் வடிகால் திட்டத்தை நிறைவேற்ற ரூ. 48,56,000, திருக்கழுகுன்றம் ஒன்றியத்தில் உள்ள கொத்திமங்கலம் கிராமத்தில் ஒருங்கிணைந்த குடிநீா் வழங்கும் முறையின் கீழ், 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி, பம்ப் அறை உள்ளிட்டவற்றுக்கு ரூ. 18,13,000 நிதியை சென்னை அணுமின் நிலையம் வழங்கியது.

இந்த இரு திட்டங்களுக்கான நிதி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் ஆா்.ராகுல் நாத்திடம் சென்னை அணுமின் நிலைய இயக்குநா் எம்.பலராமமூா்த்தி நிதிக்கான வரைவோலைகளை வழங்கினாா்.

விழாவில், சென்னை அணுமின் நிலைய கூட்டாண்மை சமூகப் பொறுப்புக் குழு தலைவா் சுபா மூா்த்தி, முதுநிலை தொழில்நுட்ப தணிக்கை பொறியாளா் எஸ்.ரவிசங்கா் மற்றும் கூட்டாண்மை சமூகப் பொறுப்புக் குழு உறுப்பினா் செயலாளா் என்.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT