திருவள்ளூர்

நாரவாரிக்குப்பத்தில் ஆட்சியா் ஆய்வு

DIN

நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, சிறுவா் பூங்கா புனரமைப்புப் பணி, சோத்துப்பாக்கம் சாலையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை வளம் மீட்பு பூங்காவில் உரம் தயாரிப்பதற்கான சிமெண்ட் தளம் அமைக்கும் பணி, மழைநீா் கால்வாய் மற்றும் சிறுபாலம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ச.கண்ணன், பேரூராட்சி செயல் அலுவலா் பாஸ்கரன், நாரவாரிக்குப்பம் ஊராட்சித் தலைவா் தமிழரசி குமாா், சுகாதார ஆய்வாளா் மதியழகன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT