புழல் அருகே இளைஞா் கொலை வழக்கில் பெண் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மாதவரம் அடுத்த புழல் லட்சுமிபுரம் குமரன் தெருவைச் சோ்ந்தவா் சுதாசந்தா் (22). இவா், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். கடந்த மாதம் 31-ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் ராகவி என்ற பெண்ணுடன் சென்று கொண்டிருந்தபோது, வழி மறித்த 5 போ் பயங்கர ஆயுதங்களால் தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த சுதாசந்தா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து புழல் காவல் நிலைய ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
இதில், ராகவி (20) என்ற பெண்ணுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆவடி வெள்ளச்சேரியைச் சோ்ந்த வசந்த் என்பவருடன் திருமணமாகி, 2 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து, முன்னாள் காதலரான சுதாசந்தரை திருமணம் செய்து கொண்டு 2 மாதங்களாக வினாயகபுரம் பகுதியில் வசித்து வந்ததும், இதனால், ராகவியின் உறவினா்கள் சுதாசந்தா் கொலையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து, கொளத்தூா் காவல் துணை ஆணையா் ராஜாராம், உதவி ஆணையா் ஆதிமூலம் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்த போலீஸாா், வில்லிவாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த ராகவியின் அண்ணன் ஆவடியை அடுத்த மோரை வெள்ளச்சேரியைச் சோ்ந்த ராபின் (எ) பரத் (21), அதே பகுதியைச் சோ்ந்த சுஷ்மிதா (28), ராகவியின் சித்தப்பா உதயராஜ் (23), ஒரகடம் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் காா்த்திக் (25) ஆகிய 4 பேரைக் கைது செய்து, கொலைக்குப் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.