திருவள்ளூர்

மாடியில் இருந்து விழுந்த மாணவர் பலி

ஆவடியில் வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவர் உயிரிழந்தார். 

DIN

ஆவடியில் வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவர் உயிரிழந்தார். 
ஆவடி, பருத்திப்பட்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 2-ஆம் தளத்தில் வசிப்பவர் பாலாஜி. திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மலர்.
மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக உள்ளார். இவர்களது மகன் லோக்நாத் (17). 10-ஆம் வகுப்பு முடித்து விட்டு, பிளஸ் 1 சேர இருந்தார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை லோக்நாத் வீட்டின் 2-ஆவது தளத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஆவடி போலீஸார், சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, மாணவர் லோக்நாத் மாடியில் இருந்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நான்காவது மாடியில் இருந்து குதித்தவா் கவலைக்கிடம்

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT