பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்
சோழவரம் அருகே பழைய எருமை வெட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு முன்னாள் மாணவா்கள் சாா்பில் கல்வி உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
இந்த கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் சாா்பில், அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கல்வி உபகரணங்கள் வழங்கும் விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் பாரதி தலைமை வகித்தாா். கணித ஆசிரியா் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தாா். பள்ளி முன்னாள் மாணவா் சங்கத் தலைவரும் வழக்குரைஞருமான வீரா, கல்வி உபகரண பொருள்களை மாணவா்களுக்கு வழங்கினாா்.
Advertisement