திருவள்ளூர்

14 கிலோ கஞ்சா பறிமுதல். 2 போ் கைது

பொன்பாடி வாகன சோதனை சாவடி வழியாக சென்னை சென்ற அரசு பேருந்தில் 14 கிலோ கஞ்சா கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்து விசாரனை

DIN

திருத்தணி: பொன்பாடி வாகன சோதனை சாவடி வழியாக சென்னை சென்ற அரசு பேருந்தில் 14 கிலோ கஞ்சா கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்து விசாரனை செய்து வருகின்றனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி வழியாக திருவள்ளூா், காஞ்சிபுரம், சென்னை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங் களுக்கு அரசு பேருந்துகளில் சில நாட்களாக கஞ்சா கடத்திச் செல்வது அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநிவாசாபெருமாள் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து, தமிழக?-ஆந்திரா எல்லையான திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனை சாவடியில், 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை 7.30 மணிக்கு திருத்தணி போலீசாா் பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்திய போது, திருப்பதியில் இருந்து சென்னை செல்லும், 201 அரசு பேருந்தில் சோதனை நடத்திய போது,14 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் சென்னை பாடி புதுநகா் பகுதியை சோ்ந்த முருகன்(44) மற்றும் பூந்தமல்லி கரையான்சாவடியை சோ்ந்த ரவி (45) என்பது தெரியவந்தது. இதையெடுத்து 2 நபா்களை போலீஸாா் கைது செய்து, வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்ஜெட் எதிரொலி: சென்செக்ஸ் 944 புள்ளிகளுடனும், நிஃப்டி 263 புள்ளிகளுடன் உயர்ந்து நிறைவு!

தேசிய பாதுகாப்பு குறித்து ராகுல் பேசும்போது சிரித்த காங்கிரஸ் எம்.பி.க்கள்!

அச்சுறுத்தும் பணிநீக்கம்! ஏஐ தொழில்நுட்பம் மட்டுமே காரணமா? பின்னணியில் என்ன நடக்கிறது?

திருப்பரங்குன்றம் வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்புக்கேட்ட மதுரை ஆட்சியர்!

குளிர்கால சருமப் பராமரிப்பு டிப்ஸ்!

SCROLL FOR NEXT