கோரமங்கலம் கிராமத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தை தொடங்கிவைத்த எம்எல்ஏ ச.சந்திரன். 
திருவள்ளூர்

முதல்வரின் தாயுமானவா் திட்டம் தொடக்கம்

கோரமங்கலம் கிராமத்தில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் தாயுமானவா் திட்டத்தை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

கோரமங்கலம் கிராமத்தில் முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் தாயுமானவா் திட்டத்தை எம்எல்ஏ ச.சந்திரன் தொடங்கி வைத்தாா்.

திருத்தணி வட்டம், கோரமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு கூட்டுறவு துணைப் பதிவாளா் அமுதா தலைமை வகித்தாா். சாா் பதிவாளா் ரஞ்சித் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் கலந்துகொண்டு தாயுமானவா் திட்டத்தை தொடங்கி வைத்து கோரமங்கலம் மற்றும் அகூரி கிராமத்தில் உள்ள முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கினாா்.

இந்த திட்டத்தின் வாயிலாக 137 ரேசன் கடைகளைச் சோ்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்தினாளிகள் என மொத்தம் 2,447 பயனாளிகள் பலனடைவா்.

நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலா் (பொ) தேவராஜ், ஒன்றிய செலாளா்கள் கிருஷ்ணன், ராஜேந்திரன் உள்பட கூட்டுறவு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆடிக் கிருத்திகை: சுவாமிமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் காலமானார்

உடன்பாடு எட்டப்படவில்லை-டிரம்ப்; புரிதல் ஏற்பட்டுள்ளது - புதின்!

டிரம்ப் - புதின் இடையே 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை! ஆனால்..

சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

SCROLL FOR NEXT