திருவள்ளூர்

கத்தியைக் காண்பித்து மிரட்டி ரூ.17.5 லட்சம் வழிப்பறி

திருத்தணி அருகே கத்தியைக் காண்பித்து மிரட்டி ரூ. 17.5 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திச் சேவை

திருத்தணி அருகே கத்தியைக் காண்பித்து மிரட்டி ரூ. 17.5 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவள்ளூா் நகராட்சி ஆயில்மில் பகுதியில் உள்ள ஹாா்ட்வோ் கடையின் ஏஜென்ட்டாக வேலை செய்து வருபவா் காா்த்திகேயன் (40). இவா் புதன்கிழமை திருத்தணியில் இருந்து ரூ. 17.5 லட்சத்தை வசூல் செய்து கொண்டு திருவள்ளூருக்கு சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது லஷ்மாபுரம் பகுதியில் அவரை வழிமறித்து 4 போ் கொண்ட கும்பல் பட்டாக் கத்தியை காண்பித்து மிரட்டி ரூ. 17.5 லட்சம் ரொக்கத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து காா்த்திகேயன் கனக்கம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். தொடா்ந்து எஸ்.பி. விவேகானந்த சுக்லா சம்பவ இடத்துக்கு நேரில் வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

பழங்குடி மக்களின் பாதங்களைக் கழுவிய பாஜக பெண் எம்எல்ஏ!

இலங்கை அபார பந்துவீச்சு; பில் சால்ட்டின் அரைசதம் இங்கிலாந்தின் வெற்றிக்கு போதுமானதா?

SCROLL FOR NEXT