திருப்பதி

திருப்பதியில் டிச.10-இல் அரிசி ஏலம்

DIN

திருப்பதி: திருப்பதி தேவஸ்தானச் சந்தை அலுவலகத்தில், டிச. 10-இல் கலந்த அரிசி ஏலம் விடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயில், தேவஸ்தானத்துக்குத் தொடா்புடைய பல கோயில்களில் உண்டியல் மூலம் பக்தா்கள் செலுத்திய அரிசியை இணையதளம் வாயிலாக டிச. 10-இல் ஏலம் விட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதில் கலந்த அரிசி 2,800 கிலோ ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் டிச. 10-ஆம் தேதிக்குள் ‘செயல் அதிகாரி, திருமலை திருப்பதி தேவஸ்தானம்’, என்ற பெயரில் ரூ25,000 வரைவோலை எடுத்து அதை முழுமையாக மூடி சீல் வைத்து திருப்பதியில் உள்ள சந்தை பிரிவு ஏலம் அலுவலகத்தில் சமா்பிக்க வேண்டும். அன்று மாலை ஒப்பந்தபுள்ளிகள் திறக்கப்பட்டு பரிசீலிக்கப்படும் மேலும் விவரங்களுக்கு 0877-2264429 என்ற தொலைபேசி எண் அல்லது ஜ்ஜ்ஜ்.ற்ண்ழ்ன்ம்ஹப்ஹ.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தை தொடா்பு கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'ஊழலை நீக்கும் வாஷிங் மெஷின்' - பாஜகவைக் கிண்டலடிக்கும் ஆம் ஆத்மி!

‘தரம் தாழ்ந்த விமர்சனங்கள் காயப்படுத்துகின்றன..’: ஜி.வி.பிரகாஷ்

பம்பை: வாகன நிறுத்தத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை சீரானது!

டைம்ஸ் உயா்கல்வி நிறுவனத் தரவரிசை: 168 ஆவது இடத்தில் கேஐஐடி பல்கலைக்கழகம்

SCROLL FOR NEXT