திருவண்ணாமலை

சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை

DIN

வந்தவாசி நகரில் மழையினால் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வந்தவாசியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற அந்த சங்கத்தின் வந்தவாசி வட்டக் கிளை ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு கிளைத் தலைவர் எ.கமாலுதீன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம்.கே.கோவிந்தசாமி, மண்டலச் செயலர் எம்.மணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கிளைச் செயலர் எஸ்.நடேசன், துணைத் தலைவர்கள் பி.குலசேகரன், பி.மணி, எ.ராமமூர்த்தி, அமைப்புச் செயலர் கே.அப்துல்மஜீத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழக அரசு 7-ஆவது ஊதியக்குழு நிலுவைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் 17-ஆம் தேதி ஓய்வூதியர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மேலும் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT