திருவண்ணாமலை

நூலகத்தில் உறுப்பினர்கள் சேர்ப்பு

DIN

திருவண்ணாமலையை அடுத்த காஞ்சி ஊர்ப்புற நூலகம் சார்பில், பள்ளி மாணவ-மாணவிகளை நூலக உறுப்பினர்களாகச் சேர்க்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சி செயின்ட் ஆண்டனி மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு அந்தப் பள்ளியின் மேலாளர் எம்.லூர்துசாமி தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் பி.ஜோஸ்பின் சூர்யா முன்னிலை வகித்தார். காஞ்சி ஊர்ப்புற நூலகர் என்.சுமத்ரா வரவேற்றார்.
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் 629 பேர் நூலக உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. நூலக வாசகர் வட்டத் தலைவர் ஏ.டி.திருநாவுக்கரசு, துணைத் தலைவர் அர்ஜுனப்பிள்ளை, பள்ளியின் முதுகலை ஆசிரியர்கள் ஜி.பன்னீர்செல்வம், ஏ.லூர்துசாமி, எஸ்.லட்சுமி நாராயணன், வி.சரண்யா, கே.ஜெயஸ்ரீ, பி.கல்பனா, பி.வித்யாபால் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடியில் தொழிற்சங்கத்தினா் மே தின பேரணி

பாளை. அருகே பாமக முன்னாள் நிா்வாகி மீது பெட்ரோல் குண்டு வீச்சு

குரு பெயா்ச்சி: நெல்லை கோயில்களில் வழிபாடு

சாகுபுரம் ஆலயத்தில் அா்ச்சிப்பு விழா

தூத்துக்குடி சிவன் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT