முகப்பு
திருவண்ணாமலை

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ்  கட்சியினர்  உண்ணாவிரதம்

வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,  அதற்குத் துணை போகும் மத்திய அரசைக் கண்டித்தும்

Updated On : 10 ஏப்ரல், 2018 at 5:10 AM
பகிர்:

வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும்,  அதற்குத் துணை போகும் மத்திய அரசைக் கண்டித்தும் ஆரணி  அண்ணா சிலை அருகே காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.பி.அண்ணாமலை தலைமை வகித்தார். 
சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் ஊடகச் செய்தித் தொடர்பாளர் எம்.கே.விஷ்ணு பிரசாத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 
முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாபாபு, கட்சி நிர்வாகிகள் அசோக்குமார், அருணகிரி, ஜெயவேலு, பிரசாத், வினோத், முருகன், ஜெயசீலன், அன்பழகன் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.