திருவண்ணாமலை

பைக் மோதியதில் முதியவர் சாவு

DIN

வேட்டவலம் அருகே பைக் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர் உயிரிழந்தார்.
வேட்டவலத்தை அடுத்த ஆவூர் கிராமம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் சடையன் மகன் முருகேசன் (வயது 70). இவர், வெள்ளிக்கிழமை மாலை கடைக்கு நடந்து சென்றார். அப்போது, அந்த வழியே பைக்கில் வந்த ஆவூர், அமீனா நகரைச் சேர்ந்த அமீல் ஜான் மகன் அகமது பாஷா (29), முதியவர் மீது எதிர்பாராதவிதமாக மோதினார்.
இதில், பலத்த காயமடைந்த முருகேசனை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். எனினும், அங்கு முருகேசன் சனிக்கிழமை காலை இறந்தார். இதுகுறித்து வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT