முகப்பு
திருவண்ணாமலை

போளூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

போளூரில் பட்டேல் அல்லாபஷ்சா தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் திங்கள்கிழமை அகற்றினர்.

Updated On : 15 மே, 2018 at 4:22 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

போளூரில் பட்டேல் அல்லாபஷ்சா தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் திங்கள்கிழமை அகற்றினர்.
போளூர் சிறப்பு நிலைப் பேரூராட்சி 6-ஆவது வார்டில் பட்டேல் அல்லாபஷ்சா தெருவில் வசிக்கும் சிலர் தெருவை ஆக்கிரமித்தும், கால்வாய் மீது சிலாப் அமைத்தும் உள்ளதால், அந்தத் தெருவில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமா பானு, துப்புரவு ஆய்வாளர் சோமு உள்ளிட்ட அலுவலர்கள் அங்கு சென்று ஊழியர்களின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.