முகப்பு
திருவண்ணாமலை

பைக் மோதியதில் வியாபாரி சாவு

செய்யாறு அருகே அடையாளம் தெரியாத பைக் மோதிய விபத்தில் துணி வியாபாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

Updated On : 22 மே, 2018 at 12:48 AM
பகிர்:

செய்யாறு அருகே அடையாளம் தெரியாத பைக் மோதிய விபத்தில் துணி வியாபாரி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் நத்தம்பேட்டை நடுத் தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் சுரேஷ். துணி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்களில் காஞ்சிபுரத்திலிருந்து உக்கம்பெரும்பாக்கம் கிராமத்துக்கு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத பைக் அவர் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டதாம். காயத்துடன் வீட்டுக்குச் சென்ற சுரேஷ் தூங்கிவிட்டாராம். மறுநாள் காலை அவரது மனைவி அவரை எழுப்பிய போது, மயக்க நிலையில் இருந்தாராம். உடனடியாக அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அய்யனார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.