திருவண்ணாமலை

ஆரணி கைலாயநாதர் கோயில் தேர்த் திருவிழா

DIN


ஆரணி கைலாயநாதர் கோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது.
ஆரணி கைலாயநாதர் கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த 10-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தினந்தோறும் காலையும், மாலையும் சுவாமி அலங்கரிக்கப்பட்டு, அன்னம், யானை, நாகம், நந்தி, ராவணேஸ்வர வாகனங்களில் வீதியுலா வந்தது. 
விழாவில், கைலாயநாதர் - அறம்வளர்நாயகிக்கும், முருகர் - வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது.
இந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
தேரில் உத்ஸவர் அறம்வளர்நாயகி சமேத கைலாயநாதர் எழுந்தருளியதை அடுத்து, திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். 
கோட்டை வீதி, பழைய பேருந்து நிலையம், வடக்கு மாட வீதி, பெரியகடை வீதி, மண்டி வீதி, சந்தை சாலை வழியாகச் சென்ற தேர், மீண்டும் கோயிலை வந்தடைந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

SCROLL FOR NEXT