திருவண்ணாமலை

கல்லூரியில் ஆங்கில மொழி பயிலரங்கம்

DIN

திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆப் என்ஜீனியரிங் கல்லூரி சார்பில், முதலாம் ஆண்டு மாணவ - மாணவிகளுக்கான ஆங்கில மொழி பயிலரங்கம், கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் துணைத் தலைவர் எ.வ.குமரன் தலைமை வகித்தார். கல்லூரிப் பதிவாளர் இரா.சத்தியசீலன், கல்லூரி முதல்வர் இர.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலாம் ஆண்டு துறைத் தலைவர் ஆனந்தகுமார் வரவேற்றார். திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் இணைப் பேராசிரியர் என்.அருள்தாஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு "சொல்லாட்சிக்கான அமைப்பு' என்ற மையத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் ஆங்கில மொழித் துறை உதவிப் பேராசிரியர் இதயத்கான், கல்லூரித் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ - மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT