செய்யாறை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் 27 நட்சத்திர கோயிலில் மண்டல பூஜை நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமம் அருகே கூழமந்தல் ஏரிக்கரையில் 27 நட்சத்திர அதிதேவதைகளின் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூன் 14-ஆம் தேதி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து 48 நாள்கள் மண்டல அபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில், அதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில், காலை விக்னேஷ்வரர் பூஜை, கோபூஜை, நவகலச ஸ்தாபனம், 108 சங்கு பூஜை, யாக வேள்வி, மகா பூர்ணாஹீதி, தீபாராதனை, 108 சங்காபிஷேகம், நவகலசாபிஷேகம், மஹா
அபிஷேகம், மஹா தீபாராதனை போன்றவை நடைபெற்றன.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நிறைவு விழா ஏற்பாடுகளை அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.