திருவண்ணாமலை

27 நட்சத்திர கோயிலில் மண்டல பூஜை நிறைவு விழா

DIN

செய்யாறை அடுத்த உக்கம்பெரும்பாக்கம்  27 நட்சத்திர கோயிலில் மண்டல பூஜை நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.     
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமம் அருகே கூழமந்தல் ஏரிக்கரையில் 27 நட்சத்திர அதிதேவதைகளின் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் கடந்த ஜூன் 14-ஆம் தேதி நடைபெற்றது. 
அதைத் தொடர்ந்து 48 நாள்கள் மண்டல அபிஷேகம் நடைபெற்று வந்த நிலையில், அதன் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
விழாவில், காலை விக்னேஷ்வரர் பூஜை, கோபூஜை, நவகலச ஸ்தாபனம், 108 சங்கு பூஜை, யாக வேள்வி,  மகா  பூர்ணாஹீதி, தீபாராதனை, 108 சங்காபிஷேகம், நவகலசாபிஷேகம், மஹா 
அபிஷேகம், மஹா தீபாராதனை போன்றவை நடைபெற்றன. 
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 நிறைவு விழா ஏற்பாடுகளை அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT