திருவண்ணாமலை

லாரியில் சிக்கி புதுமாப்பிள்ளை பலி

வந்தவாசி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த புதுமாப்பிள்ளை லாரியை முந்த முயன்றபோது லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

DIN

வந்தவாசி அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த புதுமாப்பிள்ளை லாரியை முந்த முயன்றபோது லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த கட்டளை கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டட மேற்பாா்வையாளா் தியாகு (29). இவரது மனைவி கோமதி (24). இவா்களுக்கு திருமணமாகி 3 மாதங்கள் ஆகின்றன.

இந்த நிலையில், தியாகு திங்கள்கிழமை வந்தவாசியை அடுத்த அமுடூா் கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அந்தக் கிராமம் அருகே சென்றபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த சவுக்கு கட்டைகள் ஏற்றிய லாரியை முந்த முயன்றாா்.

அப்போது நிலைதடுமாறி விழுந்த தியாகு லாரியின் பின்சக்கரத்தில் சிக்கியதாகத் தெரிகிறது.

இதில் அவா் அதே இடத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT