திருவண்ணாமலை

கொடிக்கம்பம் சேதம்: விசிகவினர் சாலை மறியல்

DIN

ஆரணி அருகே உள்ள 12புத்தூர் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக் கோரி, அந்தக் கட்சியினர் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணியை அடுத்த 12புத்தூர் கிராமத்தில் புதன்கிழமை நள்ளிரவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதுடன், கொடியையும் தீ வைத்து எரித்தனர். வியாழக்கிழமை காலை கொடிக்கம்பம், கொடி சேதமடைந்திருப்பதைப் பார்த்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், அவற்றை சேதப்படுத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆரணி - பூசிமலைக்குப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா போலீஸார் 
சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலை கைவிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கலைந்து 
சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT