திருவண்ணாமலை

சாலை விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் சாவு

DIN

வேட்டவலம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் இறந்தார். மாட்டின் இடதுகால் முறிந்தது.
வேட்டவலத்தை அடுத்த ஜமீன் கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் வில்லியம் ஆனந்த் (48). இவர், வேட்டவலம் லயோலா கல்லூரியில் இரவுக் காவலராகப் பணிபுரிந்து வந்தார்.
வில்லியம் ஆனந்த் வியாழக்கிழமை இரவு பைக்கில் வேலைக்கு சென்றுகொண்டிருந்தார். வேட்டவலத்தை அடுத்த சின்ன ஓலைப்பாடி கூட்டுச்சாலையில் ஓட்டை பிள்ளையார் கோயில் அருகே சென்றபோது, மாடு ஒன்று குறுக்கே வந்ததாம்.
மாட்டின் மீது பைக் மோதியதால் வில்லியம் ஆனந்த் தூக்கி வீசப்பட்டார். இதில், பலத்த காயமடைந்த அவர், அதே இடத்தில் இறந்தார். தகவலறிந்த வேட்டவலம் போலீஸார் விரைந்து சென்று வில்லியம் ஆனந்தின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் மாட்டின் இடதுகால் முறிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT