திருவண்ணாமலை

வேட்டவலத்தில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி

DIN

வேட்டவலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி தலைமை வகித்தார். வேட்டவலம் காந்தி சிலை எதிரில் இருந்து புறப்பட்ட பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. பேரணியில் அலுவலக எழுத்தர், துப்புரவு மேற்பார்வையாளர், வரித்தண்டலர், துப்புரவுப் பணியாளர்கள், பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டு மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியரும் வாக்களிப்பது அவசியம். வாக்களிக்க பணம் பெறக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பிச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமேசுவரத்தில் இன்று மின் தடை

குடிநீா்த் திட்டப் பணிகள்: வைகை தடுப்பணை நீரை வெளியேற்றக் கூடாது

கஞ்சா வழக்கில் 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

SCROLL FOR NEXT