திருவண்ணாமலை

அப்பர் சுவாமிகள் குருபூஜை விழா

DIN

திருவண்ணாமலையில் அப்பர் சுவாமிகள் குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
 திருவண்ணாமலை அப்பர் சுவாமிகள் திருமடம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு, அப்பர் சுவாமிகள் மடத்தின் தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். செயலர் சந்திரசேகரன், பொருளாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளரும், நல் நூலகருமான சிவா வரவேற்றார். திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அப்பர் செய்த அற்புதங்கள் என்ற தலைப்பில் இசையுரை நிகழ்த்தினார். ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் பரசுராமன், ராஜமனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
 முன்னதாக, அருணாசலேஸ்வரர் கோயிலில் அப்பர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், மாலையில் அப்பர் சுவாமிகள் வீதியுலாவும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT